எண்சீர் விருத்தம் அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி அகாரமெனும் எழுத்த துவே பாதமாகி முடியாகி நடுவாகி மூலந் தன்னில் முப்பொருளுந் தானாகி முதலு மாகிப் படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற் படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி அடியாகு மூலமதே அகார மாகி அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. | 1 |
| |
அதுவாகி அவனவளாய் எல்லா மாகி அடிநடுவு முடிவாகி அகண்ட மாகிப் பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கு மூல மாகி மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி மலராகி மணமாகி மதிக்க வொண்ணா அதுவாகும் அகாரமதே மூல மாகி அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம் மூல மாமே. | 2 |
| |
மூலமெனு மாதார வட்டந் தானே முச்சுடரு முக்கோண மூன்று நாடிச் சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந் திருவடியுந் திருமேனி நடமு மாகும் கோலமு டனண்டமெல்லாந் தாங்கிக் கொண்டு கொழுந்து விட்ட கம்பமதாய் மேலே நோக்கி ஆலமுண்ட கண்டெமலாந் தானாய் நின்ற அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே. | 3 |
| |
அறிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்; அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்; பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்; பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்; அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை; அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. | 4 |