நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை நுண்பொருளாஞ் சிற்பரத்தி னூடே நோக்குந் தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித் திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப் போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார் புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்; ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே அனுதினமும் நோக்கிநிற்பார் ஆசா னாமே. | 5 |
| |
ஆசானு மீசானு மொன்றே யாகும் அவனவளு மொன்றாகும் அது தானாகும்; பேசாத மந்திரமு மிதுவே யாகும்; வேரொளியின் வடிவாகும்; பேரு மாகும் நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்; நிலையான ஓங்கார பீடமாகும் ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்கு இன்பமுடன் கயிலாச மெய்த லாமே. | 6 |
| |
எய்தரிய பரமசிவத்தின் மூலந் தன்னில் இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று எய்தரிய பரசிவத்தின் மூலந் தன்னில் இருசுடரு முதித்தொடுங்கு மிடமேயென்று மெய்தொழியுஞ் சுழுமுனையே கம்ப மாகி மெய்ப்பொருளாஞ் சோதியென மேவி நிற்கும்; இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை இருநேர மற்றிடத்தே யிறைஞ்சிக் காணே. | 7 |
| |
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்; காணரிய பொருளாகுங் காட்டும் போதே ஆண்பெண்ணாய் அலியாகி அடியு மாகி அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் காணா வெறும்பாழ தாகியே மேவி நின்றார் சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத் தேடரிய பாதமென்றே தெளிந்து நோக்கே. | 8 |