சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்; செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன் நந்தியென்ற வாகனமே தூல தேகம்; நான்முகனே கண்மூக்குச் செவிநாக் காகும்; தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்; தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே. | 2 |
| |
அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்; பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்; பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்; மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு; சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே. | 3 |
| |
ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர்கண் டதையெல்லாம் சரிதை யென்பார்; ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார் வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று வாய்பேசா வூமையைப்போல் திரிகு வார்கள்; காமப்பா ஞானமென விண்டு மேலும் காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே. | 4 |
| |
சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத் தூடிப்பா ருலகத்தல் சிற்சில் லோர்கள்! தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம் தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்; பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார் பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார். கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று காரணத்தை யறியாத கசடர் தானே; | 5 |
| |
தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள் சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு | |