பக்கம் எண் :

390சித்தர் பாடல்கள்

சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்;
     செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே தூல தேகம்;
     நான்முகனே கண்மூக்குச் செவிநாக் காகும்;
தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்;
     தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே.
2
  
அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
     அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
     பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
     மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
     சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே.
3
  
ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
     அவரவர்கண் டதையெல்லாம் சரிதை யென்பார்;
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
     உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
     வாய்பேசா வூமையைப்போல் திரிகு வார்கள்;
காமப்பா ஞானமென விண்டு மேலும்
     காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே.
4
  
சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
     தூடிப்பா ருலகத்தல் சிற்சில் லோர்கள்!
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
     தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்;
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
     பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்.
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
     காரணத்தை யறியாத கசடர் தானே;
5
  
தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
     சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு