ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்; தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்; திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்; கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி காரணத்தை யறியாமல் கதறு வாரே. | 6 |
| |
கதறுகின்ற பேர்களையா கோடா கோடி; காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம் பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப் பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா! உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்; சிதறுகின்ற பேர்களைப்போல் சிதறி டாமல் சிவசக்தி வரும்போதே தன்னில் நில்லே. | 7 |
| |
நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம் வல்லமையைச் சாத்திரங்க ளிருமூன் றாக வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக் கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள் கட்டினா ரவரவர்கள் பாஷையாலே; தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே. | 8 |
| |
தானென்ற வுலகத்தி லில்லா விட்டால் தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்; ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்; உலகத்தி லவரவர்கள் பாஷை வேணும்; மானென்ற சிவகாமி சிவனுங் கூடி மாமுனிர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்; தேனென்ற சிவகாமி யருளி னாலே திரட்டினார் வெகுகோடி தேச பாஷை | 9 |
| |
தேசத்தின் பாஷைதனை யறிந்தி டாமல் தெளிவாகத் தாமுரைப்பார் பாஷை பார்த்தோர்; | |