பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்391


ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
     உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
     திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
     காரணத்தை யறியாமல் கதறு வாரே.
6
  
கதறுகின்ற பேர்களையா கோடா கோடி;
     காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
     பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
     உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல் சிதறி டாமல்
     சிவசக்தி வரும்போதே தன்னில் நில்லே.
7
  
நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே
     நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையைச் சாத்திரங்க ளிருமூன் றாக
     வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
     கட்டினா ரவரவர்கள் பாஷையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
     தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே.
8
  
தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
     தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
     உலகத்தி லவரவர்கள் பாஷை வேணும்;
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
     மாமுனிர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளி னாலே
     திரட்டினார் வெகுகோடி தேச பாஷை
9
  
தேசத்தின் பாஷைதனை யறிந்தி டாமல்
     தெளிவாகத் தாமுரைப்பார் பாஷை பார்த்தோர்;