பக்கம் எண் :

392சித்தர் பாடல்கள்

ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
     ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்;
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
     வார்த்தையினால் மருட்டிவைப்பர் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
     நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.
10
  
சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
     திறவுகோல் வால்மீகன் பதினா றாகும்;
சிவம்பெத்த சித்தரெல்லா மென்னூல் பார்த்துச்
     சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
     அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக;
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
     நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்.
11
  
நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
     நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
     தாயாரைப் பூசித்து வேதம் ஓது;
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
     வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
     நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே.
12
  
காணரிதே யெவராலு மிருசு வாசம்;
     காண்பவனே சிவசித்த னவனே யாகும்;
பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்
     பூலோக சித்தனென வுரைக்க லாகும்;
காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;
     காட்டாதே மூடருக்கே யிந்நூல் தன்னை;
தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே
     சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா.
13
  
சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;
     சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;