ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்; ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்; வாசிதனை யறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பர் வகையி லாமல்; நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர் நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே. | 10 |
| |
சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினா றாகும்; சிவம்பெத்த சித்தரெல்லா மென்னூல் பார்த்துச் சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்; அவமாகிப் போகாமல் சிவனுத் தார அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக; நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால். | 11 |
| |
நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால் நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத் தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத் தாயாரைப் பூசித்து வேதம் ஓது; வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே. | 12 |
| |
காணரிதே யெவராலு மிருசு வாசம்; காண்பவனே சிவசித்த னவனே யாகும்; பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில் பூலோக சித்தனென வுரைக்க லாகும்; காணரிது சிவசக்தி திருமூச் சாகும்; காட்டாதே மூடருக்கே யிந்நூல் தன்னை; தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா. | 13 |
| |
சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண; சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா; | |