சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை; சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக் காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல் காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்; ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே. | 14 |
| |
காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு; காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள் ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்; ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்; அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்; தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே. | 15 |
| |
தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்; தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்; வானவனாம் நின்றவர்கட் கெல்லாஞ் சித்தி வானுக்குள் மனமிருக்க மதிபோல் காணும், தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும் கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன் குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே. | 16 |