“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல் தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24) வரிகளில் சுட்டிக்காட்டி, “முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சக்தியடா மனந்தானே யோக மாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா! புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற் பூலோக மெல்லந்தான் பணியு முன்னே; எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே” என்று வாசியோக மார்க்கத்தை இறைவனை அடையும் மார்க்கமாக அறிமுகப்படுத்துகின்றார். “அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும் அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும் விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக் குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26) என்று வாசியோகத்தின் மூலம் குண்டலி யோகம் செய்து இறைவனைக் காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும், “தாமென்ற உலகத்தில் மனித ரோடே சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே |