பக்கம் எண் :

458சித்தர் பாடல்கள்

“யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
 வேகமுடன் கண்டுஉணரு வீர்”

என்று கூறி முடிக்கின்றார்.

காப்பு

எண்சீர் விருத்தம்

சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
     தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
     பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
     மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
     சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.

1
  
ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி
     ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
     நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
     வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
     காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே.
2
  
பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
     பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
     திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
     அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
     விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே.
3