தள்ளாமற் சபையிலுள்ளோர் ரெல்லார் கேட்கச் சாற்றிடாய் முனிநாதா! சாற்றிடாயே? | 18 |
| |
சாற்றுகிறே னுள்ளபடி யுகங்கள் தோறும் தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு; மாற்றுகிறேன் கணத்தின்முன் னுரைத்துப் போனேன்; வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்? சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத் திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்; ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே. | 19 |
| |
கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை கொடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்; பரமான மவுனமது பரத்திற் சாடும்; ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்தசதா சிவமோடி மணியில் மீளும் கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார் ஓகோகோ அண்டமெல்லாங் கவிழ்ந்து போமே. | 20 |
| |
கவிழ்ந்துபோ மப்போது அடியே னங்கே கருத்துவைத்துத் தியானமொரு தியான முண்டு தவழ்ந்துபோங் காலமப்போ நிறுத்து வேன்யான் சமையமதி லக்கினிபோல் தம்பங் காணுஞ் சிவந்தவண்ணம் நீலவுருச் சுடாவிட் டேகும்; சிவ சிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்; நவந்துஅத னருகேதான் சென்று நிற்பேன்; நகரமுத லஞ்செழுத்தும் வரக்காண் பேனே. | 21 |
| |
காண்பேனே நாகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் கோண்பேனே யகாரமது சுடரிற் புக்கும் குருவான சுடரோடி மணியிற் புக்கும் | |