தாழ்வுறாய் நெஞ்சே தராதா மாயெங்கும் மூழ்வா னதையுயிர்போம் முன். | 36 |
| |
முன்னே யயனெழுதும் மூன்றுவினை கண்டுழன்று பின்னும் தெரியலையோ பேய்மனமே - தன்னை அறியா திருந்தால் அவனறிவானோ குறியான புத்தியென்றே கொள். | 37 |
| |
கொள்ளைக்குட் பட்டுக் குடிகேட ரோடிருந்து கள்ளக் கருத்தால் கருதாதே - மெள்ளமெள்ள அய்ந்தாய்ந்து பார்த்துநீ ஆறாறுக் கப்பாலே தேர்ந்ததாய்ந்து பார்த்துத் தெளி. | 38 |
| |
தெளிந்தநீர் பட்டமுதம் சேர்ந்தால் தெளியா தெளிந்தநீர் காட்டா தவைபோல் - தெளிந்தால் சகலப் பொருள் தோற்றும் தாழ்வுறா தொன்றும் பகலிர வில்லாத பதி. | 39 |
| |
பதிபசுபா சங்களையும் பற்றி யுருவப் பதிதனிலே தங்கிப் பலரும் - கதிபெறவே வீணாமோ நெஞ்சேகேள் வேதாந்தத் துட்பொருளை காணா மலாமோ கணக்கு. | 40 |
| |
கணக்கறியா மாயக் கருவீகர ணாதிப் பிணக்கறியா மற்பேதை நெஞ்சே - இணக்கம் அறிந்திணங்க வேணும் அருள்வெளியி னுள்ளே செறிந்தவிந்து நாதத்தைச் சேர். | 41 |
| |
சேராதே மாய்கைதனை சேர்ந்து கருக்குழியை பாராதே நெஞ்சே பதையாதே - சீரான சித்திரத்தைப் பார்த்து தினமே சித்திரத்தில் உத்திரத்தைக் கொள்ளா உகந்து. | 42 |
| |
உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தி னாலே அகந்தனையே சுத்தி பண்ணி பாய்ந்து - முகந்து குடியாம லாமோ குலவுமல மான மிடியா னதுதீர வேண்டி. | 43 |