வேண்டுந் திரவியமும் மேலுயர்ந்து பள்ளியெல்லாம் ஆண்ட திரைநாடு மம்பலமும் - மாண்டுபெருங் காடுயர்ந்தா ரேமனமே கண்டாயோ மாயனயன் தேடரிய ஈசன் செயல். | 44 |
| |
செயமகா நெஞ்சே திருட்டுமலக் கோட்டை பயமறவே வெட்டிப் பரப்பி - நயமான வாசியினால் சுட்டு மதிமயங்கக் கண்டிருப்போம் பேசிய நாம் பேசாம லே. | 45 |
| |
பேசாத ஞானப் பெருமைக் கிடப்பதுதான் ஆசாபா சங்களில்லா தார்க்கல்லோ - சுசாமல் தேசமெல்லாம் ஓடித் திரிகின்றாயே மனமே ஆசாபா சங்களும் நீ யாய். | 46 |
| |
பாசங் களைந்து பதியி லிருந்துகொண்டு பேசரிய காலைப் பிடித்திருக்க - நேசமுடன் நாமிருவ ருங்கூடி நாதாந்த ஞானத்தை தாமொருவ னாயிருக்கத் தங்கு. | 47 |
| |
தங்கு நெடுவளையில் சகலங் களுங்கடந்து எங்குநான் றானா யிருக்காமல் - மங்கு கருவானாய் நெஞ்சே கரிக்கால தூதன் வருவானே யென்ன வகை. | 48 |
| |
என்னவகை செய்வோம் எமதூதன் வந்தக்கால் பின்னையென ஒட்டானே பேய்நெஞ்சே - சொன்ன படியேகேள் தூதன் பரிந்துவரு முன்னே அடிதேடிக் கொண்டே அமர். | 49 |
| |
அமரும் மனம்புத்தி யாங்கார மேசித் தமரும் பொழுது வேறானோர் - அமரும் கோவென் றுரைத்தநமன் கொண்டுபோம் போதறிவு வாவென்றால் நெஞ்சே வாராது. | 50 |
| |
வாராது நெஞ்சே மயக்கம் வருமுன்னே வேரா னதைப்பிடித்து மேலேறிப் - பாராமல் | |