மண்டல மெலாங் கடந்து மாவீட்டை நீதிறந்து கண்டெடுத்துக் கொள்வாய் கனம். | 66 |
| |
கன தனத்து மாதர் கழிகாதல் கொண்டே வினையார் நகைக்குருக வேண்டா - தினமனமே சோதித்தா னல்லால் சுபகா ரியமாகப் போதித்தால் கொள்விலையோ புத்தி. | 67 |
| |
புத்திதரும் வித்தைதரும் பொல்லாப் பில்லாமல் நெஞ்சே சித்திமுத்திபேரின்பம் சேர்ந்திடலாம் - நித்தநித்தம் தானந்த மானதொரு சற்குருவோடே பழகி ஆனந்த முண்டிருந்தக் கால். | 68 |
| |
கால்வழிச் சென்று கருபைக் குழிக்குக்கீழ் மூலமற்ற நல்வழியே மூழ்கின்றி - மாலை இருட்டறுத்துப் போடாமஎன்பாவி நெஞ்சே திருட்டுவித்தை செய்கிறாய் சென்று. | 69 |
| |
சென்று சிவனடியில் சேர்ந்த பெரும்பாம்பு ஒன்றுமிக வாசியைத்தான் ஓட்டாமல் - நன்றாய் நிலையாக நில்லா தலைவாய் மனமே அலைவாயி னில்துரும்ப தாய். | 70 |
| |
தாய்தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம் காய்பறிக்கி றாயே கனியிருக்க - தாய்தந்தை எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான் எத்தனை பேரைப்பெற்றோம் இங்கு. | 71 |
| |
இங்குஅங்குமாய் மனமே ஈடழிய வேண்டாங்காண் அங்கம் பொருளா அறிந்துகொண்டு - எங்குமெங்கும் நாமேசிவமாக நாடினால் ஞானமொழி தாமே அருளைத் தரும். | 72 |
| |
அருளில்லா தார்க்கும் அருளறிவங் காமோ அருளறிவு தானே ஆனந்தம் - அருளறிவு தேடுவதும் கூடுவதும் சிந்தையா னந்தமுடன் நாவதும் தானறி வினால். | 73 |