கருத்திச்சை தள்ளி கருதென்று செப்பின் கருத்திச்சை தள்ளு கருத்துள். | 96 |
| |
உள்ளிருந்து நெஞ்சே உலாவுஞ் சிவகுருவை வெள்ளெருக்கின் பூச்சூடும் வேணியனை - உள்ளே மனமுருகப் பார்த்தால் மலைசிலையாகச் சென்றால் உனதறிவால் பார்த்து நீ ஓது. | 97 |
| |
ஓதுநீ நெஞ்சேகேள் ஓரெழுத்து மந்திரத்தால் ஆதியாய் எங்கும் அமர்ந்தானை - ஓதில் கடிய மிடியும் கடிய பிணியும் கடிய வணுகாமல் காக்கும். | 98 |
| |
காக்குந் தினமே கடியப் பிறப்பறுத்து கார்க்கும் பலபிணிநோய் காட்டாமல் - நோக்குமந்தி வந்து பகல்வெளியில் வாராத மன்மதனை யுந்து மதையுணர்ந்தில் வாழ். | 99 |
| |
வாழுநீ நெஞ்சே மயங்கித் திரியாதே ஏழெழுத்துக் கப்பா லிருப்பானை - ஏழை வருத்தந்தீர்த் தன்பன்மனமதனில் தங்கு பருத்தரத்தி னத்தைப் பணி. | 100 |
| |
பணிந்து துதிமனமே பல்லுயிர்கட் கெல்லாம் அணுவிலணு வாங்கியிருந் தானை - துணிவாய்ப் பிறவா திருக்கவும் பேரின்ப வாழ்வைத் திறமாக நம்பிச் செலுத்து. | 101 |