விட்டுவிட இயலாது, அல்லது அது போகாது என்று கூறும் இவர் பிற்காலச் சித்தர் என்பது ‘பாடானது’, துற்கந்தம்’ முதலான சொல்லாட்சிகளால் புலனாகிறது. நாமசொரூபமே சித்தி - அதை நாடித் தெளிந்து கொண்டாலல்லே முத்தி என்று முத்திக்கான வழியைச் சொல்கின்றார். பரிபூர ணானந்த போதம் - சிவ பரப்பிர்ம மான சதானந்த பாதம் உரிதாம் பரம்பொருளை உள்ளு - மாயம் உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு அரிதான சிவநாமம் விள்ளு - சிவன் அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு. | 1 | | | துச்சமு சாரவி சாரம் - அற்பச் சுகமது துக்கமதாம் வெகு கோரம் நிச்சய மானவி சாரம் - ஞான நிர்மல வேதாந்த சாரமே சாரம். | 2 | | | கற்பனை யாகிய ஞாலம் - அந்தக் கரணங்க ளாலே விளைந்த விசாலம் சொற்பன மாம்இந்த்ர சாலம் - அன்று தோன்றி விட்டாலது சூட்சானு கூலம். | 3 | | | அற்பம தானப்பிர பஞ்சம் - அது அனுசரித்தாலே உனக்கிது கொஞ்சம் நிற்பது அருள்மேவி நெஞ்சம் - அன்று நிகரில்லை நிகரில்லை மெய்ஞ்ஞான பொஞ்சம். | 4 | | | ஆங்காரத் தால்வந்த கேடு-முதல் ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு தாங்காம லானந்த வீடு-அன்று தாக்கும னோலயந் தானாகக் கூடு. | 5 |
|