தத்துவக் குப்பைகள் ஏது-சித்தி சாத்திர மான சடங்குகள் ஏது பத்தி யுடன் மறவாது - குரு பாதத்தைக் கண்டாற் தெரியும் அப்போது. | 6 |
| |
தூராதி தூரங்கள்இல்லை - அத்தைத் தொட்டுப் பிடிக்க வென்றால் வெகு தொல்லை, காரண தேசிகன் சொல்லை-நம்பிக் கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை. | 7 |
| |
ஆணவத் தால்வந்த காயம் - அதில் ஐவரிருந்து தொழில்செய்யும் ஞாயம் காணவ மாம்போகு மாயம்-நன்றாய்க் கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம். | 8 |
| |
மூடர் உறவு பிடியாதே-நாரி மோக விகாரத்தால் நீ மடியாதே ஆடம் பரம் படியாதே-ஞான அமுதம் இருக்க விஷம் குடியாதே. | 9 |
| |
தான் என்று வாது கூறாதே-பேசி தர்க்கங்கள் இட்டுச் சள் என்று சீறாதே ஊனென்ற பாசம் மாறாதே-போனால் உன்னாணை உன்மனஞ் செத்துந் தீராதே. | 10 |
| |
வந்த பொருளைத் தள்ளாதே-நீயும் வாராததற்கு வீணாசை கொள்ளாதே சிந்தை வசமாய்த் துள்ளாதே - சும்மா சித்திரம் போலிருந்தது ஒன்றும் விள்ளாதே. | 11 |
| |
தேகபாச பவ பந்தம்-அப்பொருள் சிற்றின்ப மானது சிச்சீர்க்கந்தம் பாகம தானவே தந்தம்-பொருள் பாவித்துப் பார்க்கில் உனக்கிது சொந்தம். | 12 |
| |
வஞ்சியர் ஆசை ஆகாதே-அந்த மயக்கமானாற் கொஞ்ச மட்டிற் போகாதே | |