பக்கம் எண் :

512சித்தர் பாடல்கள்

தத்துவக் குப்பைகள் ஏது-சித்தி
     சாத்திர மான சடங்குகள் ஏது
பத்தி யுடன் மறவாது - குரு
     பாதத்தைக் கண்டாற் தெரியும் அப்போது.
6
  
தூராதி தூரங்கள்இல்லை - அத்தைத்
     தொட்டுப் பிடிக்க வென்றால் வெகு தொல்லை,
காரண தேசிகன் சொல்லை-நம்பிக்
     கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை.
7
  
ஆணவத் தால்வந்த காயம் - அதில்
     ஐவரிருந்து தொழில்செய்யும் ஞாயம்
காணவ மாம்போகு மாயம்-நன்றாய்க்
     கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம்.
8
  
மூடர் உறவு பிடியாதே-நாரி
     மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம் பரம் படியாதே-ஞான
     அமுதம் இருக்க விஷம் குடியாதே.
9
  
தான் என்று வாது கூறாதே-பேசி
     தர்க்கங்கள் இட்டுச் சள் என்று சீறாதே
ஊனென்ற பாசம் மாறாதே-போனால்
     உன்னாணை உன்மனஞ் செத்துந் தீராதே.
10
  
வந்த பொருளைத் தள்ளாதே-நீயும்
     வாராததற்கு வீணாசை கொள்ளாதே
சிந்தை வசமாய்த் துள்ளாதே - சும்மா
     சித்திரம் போலிருந்தது ஒன்றும் விள்ளாதே.
11
  
தேகபாச பவ பந்தம்-அப்பொருள்
     சிற்றின்ப மானது சிச்சீர்க்கந்தம்
பாகம தானவே தந்தம்-பொருள்
     பாவித்துப் பார்க்கில் உனக்கிது சொந்தம்.
12
  
வஞ்சியர் ஆசை ஆகாதே-அந்த
     மயக்கமானாற் கொஞ்ச மட்டிற் போகாதே