பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்513


அஞ்சி யமன்கைச் சாகாதே-கெட்ட
     ஆசா பாசமாம் நெருப்பில் வேகாதே.
13
  
கல்வி மயக்கங் கடந்து-எல்லாம்
     கற்றோ மென்று றெண்ணுங் கசட்டைத் தொலைந்து
சொல்வெப் பினாலே கிடந்து-இரு
     சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து.
14
  
ஓடித் திரியும் கருத்து-அதை
     ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து
நாடிக் கொண்டம்பைப் பொருத்து - அந்த
     நாதாந்த வெட்டவெளிக் குள்இருத்து.
15
  
சாண்வயிற் றால்அலை யாதே-நிதம்
     சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே
ஆணவத் தால்உலை யாதே-உனக்கு
     கானந்த முத்தி அது நிலையாதே.
16
  
அபிமானி யாகிய சீவன்-அவன்
     அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான்
தபம்நினைந்தால் போதம் சார்வான்-நிலை
     சார்ந்து கொண்டால் சத்தி ரூபமும் ஆவான்.
17
  
நற்குரு சொன்னதே சொல்லு-தம்பம்
     நாட்ட மென்றால் வன்னி நிலையிலே நில்லு
தற்சம யங்களை விள்ளு-உண்டு
     தன்மயமாகவே தானே நீ கொள்ளு.
18
  
துன்ப இன்பங்களைத் தொட்டு-அந்தத்
     தொந்தங்கள் எல்லாந் துருசறச் சுட்டு
பின்பு பாசத்தைக் கைவிட்டு-ஒன்று
     பேசாம லந்தம் பெருமையை விட்டு.
19
  
பேச்சினால் என்னென்ன தோணும்-சும்மா
     பேசப்பேசப் பிழைஅல்லோ காணும்
வாச்சுத லால்அம்பு பூணும்-நல்ல
     மாசற்ற ஞான விசாரணை வேணும்.
20