அஞ்சி யமன்கைச் சாகாதே-கெட்ட ஆசா பாசமாம் நெருப்பில் வேகாதே. | 13 |
| |
கல்வி மயக்கங் கடந்து-எல்லாம் கற்றோ மென்று றெண்ணுங் கசட்டைத் தொலைந்து சொல்வெப் பினாலே கிடந்து-இரு சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து. | 14 |
| |
ஓடித் திரியும் கருத்து-அதை ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து நாடிக் கொண்டம்பைப் பொருத்து - அந்த நாதாந்த வெட்டவெளிக் குள்இருத்து. | 15 |
| |
சாண்வயிற் றால்அலை யாதே-நிதம் சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே ஆணவத் தால்உலை யாதே-உனக்கு கானந்த முத்தி அது நிலையாதே. | 16 |
| |
அபிமானி யாகிய சீவன்-அவன் அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான் தபம்நினைந்தால் போதம் சார்வான்-நிலை சார்ந்து கொண்டால் சத்தி ரூபமும் ஆவான். | 17 |
| |
நற்குரு சொன்னதே சொல்லு-தம்பம் நாட்ட மென்றால் வன்னி நிலையிலே நில்லு தற்சம யங்களை விள்ளு-உண்டு தன்மயமாகவே தானே நீ கொள்ளு. | 18 |
| |
துன்ப இன்பங்களைத் தொட்டு-அந்தத் தொந்தங்கள் எல்லாந் துருசறச் சுட்டு பின்பு பாசத்தைக் கைவிட்டு-ஒன்று பேசாம லந்தம் பெருமையை விட்டு. | 19 |
| |
பேச்சினால் என்னென்ன தோணும்-சும்மா பேசப்பேசப் பிழைஅல்லோ காணும் வாச்சுத லால்அம்பு பூணும்-நல்ல மாசற்ற ஞான விசாரணை வேணும். | 20 |