அநித்திய மானது தேகம்-அதில் ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம் தனித்திருந் தால்அந்த போகம்-ஒன்று தானாகி நிற்பது வேசிவ யோகம். | 21 |
| |
விரும்பாசைக்கு இடங்கள் கொடாதே-காய வேதனைக் குள்ளேநீ கட்டுப்படாதே திரும்பச் செனனம் எடாதே-குரு தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே. | 22 |
| |
கோடான கோடி தவங்கள்-அந்தக் கோவிலைச் சுற்றிச் செபிக்குஞ்செபங்கள் பாடான தல்லோ பவங்கள்-இது பண்ணுமுன் நண்ணும் துன்ப அமலங்கள். | 23 |
| |
அந்தக் கரணவி லாசம்-அதை யாராலும் தள்ளக்கூ டாது பிரயாசம் தொந்தித்து நிற்பதே பாசம்-அதிற் தோன்றாமற் தோன்றுஞ் சுயம்பிரகாசம். | 24 |
| |
நாமசொ ரூபமே சித்தி-அதை நாடித் தெளிந்துகொண்டால் அல்லோ முத்தி நேம சொரூபமே வித்து-எங்கும் நிச்சய மாகும் நிரந்தர வத்து. | 25 |