கீச்சிட் டலறினன்! வீழ்ந்து விட்டான்! - பையன்
கீரைத் தண்டடொத்த வுடல்தளர்ந்தே!
மூச்சில்லை! ஓடியே அக்கிழவன் - பிள்ளை
முகத்தில் முகம்ஒற்றிச் சாய்ந்துவிட்டான்!
காளியும் கூளியும் காக்கவில்லை! - மூடக்
கட்டுக் கதைகளை நம்பியதால்!
தேளையும் பாம்பையும் கும்பிடுவார் - இவர்
தீமை
அடைந்துமே செத்திடுவார்!
வேடிக்கை பார்த்தவர் ஓடிவிட்டார்! - அங்கு
வீழ்ந்த இரண்டுடல் வேதனையில்
கூடிக் கிடந்தது; குள்ளத்தமிழர் போல்
குருடாகி நின்றதக் கம்பமுமே!
‘குயில்’ - 1947
|