பக்கம் எண் :

103தமிழ்ஒளி கவிதைகள்

மேட்டிடை அலைகள் புகுந்து
       மெத்தென வைத்தவெண் மலரைச்
சூட்டினர் மன்னர் எடுத்துச்
       சுரிகுழல் மாயை தனக்கு!

(வேறு)

அக்கணம்,
நறுமணம் பொங்கி நாற்றிசை சென்று
சொன்னநற் செய்தி துக்கம் தொலைந்த
ஒலியாய் ஆற்றில் ஒலித்துச் சென்றதே!

மன்னர் :

(வேறு)

ஆற்றிடை வெண்ணுரை
       போன்று குழலிடை
       ஆய்மலர் தோன்றுதம்மா!
காற்றிற் கலந்தது
       காவின் மணம்! இஃது
       கற்பனை போன்றதம்மா!”

மாயை :

நீள நெடுத்திரை
நீட்டும் பரிசிது
நீதிபடைத்துப் புவி
ஆள வரும்உயிர்
அஃது தரும் மணம்
ஆகி நிறைந்த தையா!