|
வைகறை
(வேறு)
ஆழியின் ஆர்ப்பொலி
வான்முக டெட்டவும்
அமரர்தம் ஊரிடை
துந்துபி கொட்டவும்
வாழியென் றாதவன்
வான்அரங் கெய்தவும்
வையம் புலர்ந்தது
வைகறை கூறி!
மாயையின் உள்ளம்
இயற்கைப் பொருட்களுடன் பேசுதல் :
செய்கரை, குன்றுகள்
சோலைகள் தோறும்
சிந்தும் கதிர்தந்த
சித்திர வீட்டில்!
வைகறை வந்திட
வையப் பொருட்கள்
மாயை உள்ளத்தில்
மகிழ்ந்தொலி செய்யும்!
மாயை
(வேறு)
“குளத்து நீரில் எட்டிப் பார்க்கும்
கோமள வல்லி! - உன்
உளத்து நீரில் ஒளிந்த தென்ன?
ஒப்புவை சொல்லி?”
|