|
தாமரை :
“கனவுகண்டு விழித்தெ ழுந்தேன்
கதிரவன் வந்தான் - என்
நனவுபோலத் தோன்றுதம்மா!
நான்என்ன சொல்வேன்?”
திசைகள் :
“உலக மெங்கும் ஒளிபரப்பும்
ஒண்சுடர் வந்தான் - உயர்
விண்சுடர் வந்தான் - பெண்
திலகம் உன்றன் வயிற்றில்வைகிப்
பிறந்திட வந்தான் - மண்
சிறந்திட வந்தான்!
வையமென்ற மகளை நாடி
மணந்திட வந்தான் - மனம்
மகிழ்ந்திட வந்தான் - இதில்
ஐயமில்லை! மாயைச் செல்வி!
அன்னைநீ ஆனாய் - பேர்
அன்னை நீ ஆனாய்!”
(வேறு)
கிளர்திசையும் தாமரையும்
கூறா நிற்கக்
கேட்டிருந்த பெண்அன்னம்
கண்வி ழித்தாள்!
வளர்கனவு போல்நின்ற
இமயத் தின்மேல்
வைகறையின் முதற்சுடர் போய்
வண்ணந் தீட்டும்!
|