|
மாயையை அலங்கரித்தல் :
(வேறு)
தெய்வச் சிலையை
அலங்கரிக்கும் ஒரு
செய்கை போல்,
பொய்கையிலே மலர்
பூத்துப் பொலிந்த
புதுமை போல்,
மாயை தனக்கு
மகிழ்ந்து மலரணி
சாற்றினர்!
தாயைத் தொழுது
தவத்தைத் தொழுதிடும்
சாக்கியர்!
மாயையை
முத்துச் சிவிகையில் ஏற்றிச் செல்லுதல் :
முத்துச் சிவிகையில்
ஏற்றி வழிநடை
முந்தினர்!
கொத்துச் சரங்கள்
குலுங்கி ஒலித்தன
கும்பலில்!
(வேறு)
ஆடலும் பாடலும்
ஆயின முன்முனர்
ஆகவே!
நீடலும் கார்கடல்
போன்று நிறைந்தனர்
சாக்கியர்!
|