|
(வேறு)
பன்னிறம் பொலிந்த வீதி
படர்ந்தவான் வில்ல தாக
மின்னிறம் பொலிந்து தோன்ற
வெண்மதி சென்ற வாறு,
சிவிகையில் மாயை செல்லத்
தேசமும் புகழ்ந்து சொல்லக்
கவிகையும் கரியும் மாவும்
கவிந்தன மேக மென்றே!
பயணம் :
(வேறு)
முத்தொளி பெற
முழுநில வென
முன்வரும் சிவிகை - அதன்
புத்தொளி யெனப்
புகழ் வடிவெனப்
பொலிவுறும் கவிகை!
முழக்கொலி பெற
முகிற்குலம் என
முன் செல மனிதர் - அவர்
உழக்கொலி எழ
உறுதுயர் விழ
உவந்தனர் புனிதர்!
வாழ்த்தினர் "சிலர்!
வணங்கினர் பலர்!
வருந்தினர் இலரே - முடி
தாழ்த்தினர் சிலர்!
தழுவினர் பலர்!
தவறினர் இலரே!
|