மாயைதன் மலரடியை
வணங்கி னாற்போல்
மரக்கிளைகள் தாழ்வுற்றுத்
தாழ்ந்து நிற்கத்
தாயனாள் அக்கிளையில்
ஒன்றைப் பற்றித்
தராதலத்தின் பற்றறுக்குந்
தருணம் பார்த்தாள்!
தாயுடலுள் வீற்றிருந்த
சேயும் ஆங்கே,
தன்னொளியை வீசஇது
தருணம் என்றே,
நோயுடலின் விலாப்புறத்தை
நோக்க லானார்!
நொடியிலவர் ஒளிஎங்கும்
நுழைந்த தம்மா!
சற்றேனுந் துயரின்றி
விலாப் புறத்தால்,
சங்கம்போல், சிங்கம்போல்,
தருமம் போலே,
பற்றேதும் இன்றிஒரு
பாலன் தோன்றப்
“பார்இவனே புத்தன்” எனப்
பாடும் காடு!
|