பக்கம் எண் :

125தமிழ்ஒளி கவிதைகள்

காடு கூறும் செய்தி :

(வேறு)

யார் பிறந்தது பார் எனப்புவி
       யெங்கும் - சுடர்
       தங்கும்! - பெரும்
சீர் பிறந்தது கேள் எனத்திசை
       தோறும் - இசை
       சேரும்!

போர் பிறந்திடும் மண்ணில் இனிசமா
       தானம் - நல்
       ஞானம்! - கதிர்த்
தேர்மிசை ஒரு பாலகன் அவன்
       தெய்வம் - நாம்
       உய்வம்!

புத்தன் எனப்பெயர் பெற்றவனின் கழல்
       வணங்கு - நீ
       இணங்கு! - அவன்
சித்திரம்போல்ஒரு சின்னக் குழந்தை போல்
       வந்தான் - களி
       தந்தான்!

ஆளும் அரசர்க் கரசன் எனப்புவி
       போற்றும் - புகழ்
       சாற்றும்! - இனி
நாளும் அவன்பெயர் நம்செவி ஏற்றிடும்
       நாதம் - உயர்
       கீதம்!