சிற்றோடையில் நதிபோன்றிடு
செல்வப்புனல் பெருகும்!
வற்றும்குளம் கால்வாய்தொறும்
வரும் நீர் மிகை யாகும்!
சுற்றுப்புறம் எங்கும் நகை
சுடரேற்றிடும் வெள்ளம்!
கற்றோர் உளம் போலாகிடும்
களிநீர்த்துறை யாவும்!
அரசாண்டிடு மன்னர் முடி
அடிசாய்வது போலே
மரம் வீழ்வுறும்; அப்போதினில்
வாள்வீசிடும் காற்று!
வரப் போகிற புரட்சிப் புயல்
‘வரும் இப்படி’ என்றே
பெருமாமழை பொழியும், இது
பெருஞ்சோதனைக் காலம்!
‘அமுதசுரபி’ - 1949
|