பக்கம் எண் :

26தமிழ்ஒளி கவிதைகள்

மண்ணில் ஊன்றிய வித்து மாமரம்
        என்ன விண்மிசை சென்றது!
கண்ணில் எத்தனை அற்புதம் தரும்
        காட்சி வந்து நிறைந்தது!

ஓட மாமுகில் ஓட மாநதி
        ஓடும் காலமும் காற்றொடு
ஓடும் என்னுளம் ஓடும் நாட்களின்
        உண்மை தேடிய வாழ்வொடு!

‘அமுதசுரபி’ - 1951