பக்கம் எண் :

28தமிழ்ஒளி கவிதைகள்

‘எட்டா எவரெஸ்டை
        எட்டிவிட்டோம்’ என்றென்று
கொட்டிடுக வான்முரசம்!
        கூறிடுக வாழ்த்தொலிகள்!
தட்டிடுக வான்முகட்டைத்!
        தாவிடுக அந்தரமேல்!
தொட்டிடுக வெண்மதியைத்
        தோள்கொட்டி ஆடிடுக!

‘அமுதசுரபி’ - ஜீலை 1953

குறிப்பு :
‘தேன்சிங்’ என்ற இந்திய வீரன் இமய உச்சியில் ஏறிக் கொடி நாட்டிய செய்தியைக் கூறும் பாடல்.