பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 29

புனல் மகள்

தனந் தன மெனப் புனல்மகள்
நடமாடுவாள் - தகித்
ததிங்கிணம் கிணம் கிணமெனநடை
தத்தித் தளாங்கு கறைஇரு புடை

-தனந்தனமெனப்

வனந் தரும்குளிர் நிழலிடை
        எழில் மிஞ்சி - கை
வளை யொலியொடு கொஞ்சி
        வரும் வஞ்சி

-தனந்தனமெனப்

தனந் தனத் தனம்
ததிங் கிணத் தனம்
தகிதி தத்தம்
தத்த தந்தமெனத்
தாம் தாமெனும்
தரங் கங்க ளொடு

-தனந்தனமெனப்

கலகலவெனக் கால்வாய்களிற்
காற்சிலம்பொடும் ஓடி - விழி
கவர்ந்திடும் இடம் தேடி
சலசல வெனத் தமிழ்தரும் பதம்
தகும் தகுமெனப் பாடி
        உளம் கூடி
        விளை யாடி

-தனந்தனமெனப்

உதவியவர் : த. ஜெயகாந்தன் - 1954