பாடும் பறவைகள் கூடி உனக்கொரு பாடல் புனைந்ததுவும், மூடு பனித்திரை யூடு புவிக்கொரு மோகங் கொடுத்ததுவும்; ஆடுங் கிளைமிசை ஏறிச் சிறுவர் குதிரை விடுத்ததுவும், ஏடு தருங்கதை யாக முடிந்தன! இன்று வெறுங்கனவே!
‘அமுதசுரபி’ - 1955