பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 62

“காவலும் கட்டுக்களும் - ஒரு
        கன்னியின் உள்ளம்வளர்
ஆவலை வென்றதில்லை - நீ
        அறிக” என்றுரைத்தேன்!

முள்ளுக்கும் வெட்கம்வர - மலர்
        மோகினி பக்கம்வர
எள்ளுக்குள் எண்ணெயென - அவள்
        என்னுட் புகுந்துவிட்டாள்!

வாளை வெறுத்துவிட்டாள் - நான்
        வாரி அனைத்துக்கொண்டேன்!
தோளைச் சரண்அடைந்தாள் - நான்
        தொட்டு மோந்துவிட்டேன்!

‘கலைமகள்’ - 1957