பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 68

கண்ணம்மா

மஞ்சள் கரைத்து விட்டாள் - கண்ணம்மா
        மாணிக்க ஓடையிலே!
நெஞ்சங் கரைந்து விட்டேன் மஞ்சளாய்
        நீந்திநீ ராடுகிறேன்!

மூழ்கிக் குளித்து விட்டாள் - கண்ணம்மா
        முத்துநீர் ஓடையிலே!
தாழ்குழ லில்மல ராய் - அடியேன்
        தாவிட நீந்துகிறேன்!

நீரைக் கலக்கி விட்டாள் - கண்ணம்மா
        நித்தில ஓடையிலே!
பேரைக் கலக்கி விட்டாள் - அலைகளில்
        பேசிநீ ராடுகிறேன்!

சேலை பிழிந்து விட்டாள் - கண்ணம்மா
        சித்திர ஓடையிலே!
ஆலை பிழிகரும் பாய் - என்னுளம்
        ஆடநீ ராடுகிறேன்!

உள்ளம் எழுதிவிட்டாள் - கண்ணம்மா
        ஊற்றுநீ ரோடையிலே!
கள்ளம் அழிந்து விட்டேன் - அடியேன்
        காதல்நீ ராடுகிறேன்!

‘சுதேசமித்திரன்’ - 1958