பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 7

மக்கள் தொடுத்திடும் யுத்தம் - என
        வானமும் மண்ணும் இருண்டு நடுங்க,
செக்கென ஆட்டுது காற்று - பெருஞ்
        செல்வர், மணிமுடி, சட்டம், சிறைகள்
பொக்கென வீழ்வது போலே - யாவும்
        போயின பொட்டென்று விட்டது காற்று!
செக்கச் சிவந்தது வானம் - அன்னை
        சேல்விழி காட்டினள் வந்தது காலை!

‘சிந்தனை’ - 1947
‘தாமரை’ - 1960