பக்கம் எண் :

77தமிழ்ஒளி கவிதைகள்

மழைத் துளி

‘தந்ததன’ மென்று பந்தலில் - மலர்ப்
                              பந்தலில்
வந்து விழுந்தது நீர்த்துளி - மழை
                              நீர்த்துளி!
பச்சைப் பசுந்தழைக் காட்டிலே - இலை
                              மேட்டிலே
தைச்சுக் கிடந்தது புன்னகை - மழை
                              மென்னகை!
ஆழியின் உள்மனக் கூட்டிலே - சிப்பி
                              ஓட்டிலே
வாழிய வைகிய முத்துப்போல் - சுடர்
                              வித்துப்போல்
மின்னற் கொடிதந்த மொட்டுப்போல் - ஒரு
                              பொட்டுப்போல்
கன்னி யிளநகை வண்ணம்போல் - அவள்
                              எண்ணம்போல்
தொற்றும் மழைத்துளி கண்டுநான் - மயல்
                              கொண்டுநான்
முற்றுங் களிநடம் ஆடினேன் - இசை
                              பாடினேன்!

‘கலைமகள்’ - 1959