பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 90

செத்தவர் தம்மையே
       எண்ணிநீர் நைவதேன்
       கண்ணெதிர் சிற்பமாக,
ஒத்ததோர் ஆற்றலால்
       உணர்வுடன் வாழ்பவர்
       உண்மையை நீர் உணர்ந்தால்,
பத்தல்ல ஆயிரம்
       பாரதி தாசன்கள்
       பைந்தமிழ் மண்ணிடத்து
முத்தல்ல மணியல்ல
       என்று முகிழ்ப்பரே
       முத்தமிழ்க் கடல்முழங்கும்!

‘சமநீதி’ -1964