உரோகிணியின் பாடல் :
(வேறு)
காட்டிடை ஒருமகள்
மீட்டிய யாழ்போற்
‘கலகல’என் றோடும் - உரோகிணி
காற்றோடு பண்பாடும்!
மலைகளின் மறைபொருள்
அலைகளிற் கொஞ்சிட
‘மடமட’ என் றோடும் - நெறி
‘நடநட’ என் றோடும்!
முதன்முதற் கனவினிற்
புதல்வனை ஈன்றவள்
முகமென மகிழ்ந்தோடும் - அன்
பகமென நெகிழ்ந்தோடும்!
விதியினை வென்றிடும்
புதியன செய்திகள்
வித்திட விரைந்தோடும் - நீர்
முத்திட இரைந்தோடும்!
இயற்கையின் எழிலிடை
செயற்கையின் சிறப்பென
இருந்தது திருக்கபிலை - புகழ்
இயம்பிட நதியின்அலை!
*உரோகிணி :உரோகிணி ஆறு; இது கங்கையின் கிளைகளில் ஒன்று.
|