|
அவன்பட்ட கொடுமையெலாம்
மடிந்து மக்கி
அங்குள்ள வயற்பக்கம்
செத்து வீழ்ந்து
சவமாகிக் கிடந்ததனைக்
கண்டேன்; வெற்றி
சரசநடை நடந்திட்டான்
உழவன் அங்கே!
வழிகேட்டேன் நகருக்குச்
செல்வதற்கு
வான்சுடர்போல் கண்காட்டி
மகிழ்ச்சி யேந்தித்,
“தொழிலாளர் எம்தலைவர்
அங்கே யுள்ளார்;
தோன்றுதுபார் ஆலை,
அதோ!” என்று சொன்னான்!
காற்றினிலே பறந்திட்டேன்,
அடடா அந்தக்
காற்றுக்கும் அடங்காத
மகிழ்ச்சி
வெள்ளம்!
சோற்றுக்கு வாடாத
மனிதர் வாழும்
சுதந்திரநன் னாடுலவும்
காற்றே யன்றோ?
நகர்புகுந்தேன்: ஆலைக்குள்
சென்று பார்த்தேன்
நாட்டுக்கும், நானிலத்தில்
யாவருக்கும்
சகதோழர், தலைவர், புது
மனிதர் ஆகித்
தருமத்தைத தொழிலாளர்
உடையாய் நெய்தார்!
|