|
விழிகளிலே புரட்சியொளி;
சமுதா யத்தை
வீழ்த்துதற்குச் சதி செய்யும்
சழக்கர் தம்மைக்
குழிதோண்டிப் புதைத்தற்குத்
திரண்ட தோளில்
குவலயத்துப் பெருமையெலாம்
கண்டு கொண்டேன்!காதல்,
கலை, அறம் வளரும்
தியாக பூமி
கவிபொழியும் மழைபொழியும்
போக பூமி
சாதல்இல்லை; அதுவந்தால்
கவலையில்லை
தனிமனிதன், மனிதகுலத்
தாயாய் விட்டான்!
சொல்லி விட்டேன் சுருக்கத்தை”
என்று சொல்லித்
துணையாக மீண்டுமெனைத்
தொட்ட நெஞ்சாம்
மெல்லியளை மார்போடும்
அணைத்துக் கொண்டேன்
மேதினியில் தலையாய
இன்பம் பெற்றேன்!
‘முன்னணி’ - 1949
|