|
உங்களுடன் பிறந்தோர்கள் - பசை
ஒன்றுமில் லாதுபல் தேசங்கள் ஓடிச்
செங்கதிர் காயும் நிலத்தில் - உழைத்
தேங்கி ஓடாகவே தேய்ந்துவிட் டார்கள்!
ஆராய்ந்து பார்த்ததும் உண்டோ? - சில
ஆத்திரக் காரர்கள் செய்திட்ட சூதை?
தேராதிருப்பவர் காதில் - இதைச்
செப்பி முழக்கத்தைச்
செய்திடுவீரே!
‘ஜனநாயகம்’ - 1947
|