|
பொதுவுடைமைப்
பொங்கல்!
செங்கரும்பு போல்வளர்ந்த செந்நெல்-அதன்
தெள்ளரிசி யோடுசுவை சர்க்கரையும் பாலும்
பொங்குதுபார் வெண்ணிலவைப் போலே - உணர்வு
பொங்கியெழும் உழவர்குலம் வாழியஇக் காலே!
சிங்கஉடல் கொண்டதொழி லாளர் - எட்டுத்
திக்கினிலும் வெற்றிகொளப் பொங்குகவே பொங்கல்!
தங்குதடை இல்லைஇனி மேலே - நம்
தாயகத்தில் பொங்குகவே பொதுவுடைமைப் பாலே!
உதவி : ஊ.
கோவிந்தன்
குறிப்பு: தோழர்
ஊ. கோவிந்தன் அவர்கள் 1948ல் வெளியிட்ட
பொங்கல்
வாழ்த்து மடல்.
|