பக்கம் எண் :

8தமிழ்ஒளி கவிதைகள்2

தொலை நோக்கிகள்

பாரதப் பாட்டுகள் பாடிடுவார் - கம்பன் 
       பாநயம் போற்றிடக் கூடிடுவார்
நேரினில் வாழும் கவிஞர்களை - இவர் 
       நேத்திரம் கொண்டுமே நோக்குகிலார்!

பாரதி பாடலைப் பாடுகிலார் - இவர் 
       பாரதி தாசனை நாடுகிலார்
சாரத் தமிழ்நயம் பேசிடுவார் - இந்தச் 
       சண்டிகள் நொண்டிக்கை வீசிடுவார்!

சிலப்பதி காரமென் றார்த்திடுவார் - எங்கள் 
       சேர னிளங்கோ வென் றேத்திடுவார்
கலகலெனக்கவி தானிசைக்கும் - இளங் 
       கவிஞரைக் காண மறுத்திடுவார்!

தொலைவி லிருந்தவர் நோக்குகிறார் - நாட்டில் 
       தோழமை கொள்ளட்டும் அக்கணமே
கலைகள் உயிருடைக் காவியங்கள் - தமைக் 
       காணுவர் தங்களின் கண்ணெதிரே!

‘போர்வாள்’ - 1948