பரந்த உன்றன் அளவு போலக்
கருங்கடலே - நாங்கள்
பரந்த எண்ணம் பெற்றி டுவோம்
பெருங்கடலே.
தொண்டை மான்கள் என்றிட் டாலம்
கருங்கடலே - மிக்கத்
துணிச்ச லோடு எதிர்த்து மோதும்
பெருங்கடலே.
தோட்டி தொண்டை மானெ வர்க்கும்
கருங்கடலே - நீயும்
தொட்டுப் பாதம் கழுவி நிற்பாய்
பெருங்கடலே.
காற்றைத் தந்து மகிழ்ச்சி யூட்டும்
கருங்கடலே - நாங்கள்
கரையை நோக்கி வரவே செய்யும்
பெருங்கடலே.
முத்தை யெல்லாம் தோற்று விக்கும்
கருங்கடலே - நல்ல
முத்துப் போன்ற எண்ணங் கொள்வோம்
பெருங்கடலே.
|