பக்கம் எண் :

110மலரும் உள்ளம்

வெண்ணிலா

அருமை மிகவுடைய தம்பி - மேலே
    அண்ணாந்து பார்த்திடுவாய், தம்பி.
பெருமை மிகவுடைய நிலவு - எங்கும்
    பேரின்பம் ஊட்டுதடா, தம்பி.

அம்மா வாசைஇரவில் தம்பி - மேலே
    அளவற்ற மீன்கள் தோன்றும் தம்பி.
இம்மா நிலத்தினிலே தம்பி - அவை
    இருளினை ஓட்டுமோடா, தம்பி?

எண்ணற்ற மீன்களடா, தம்பி - வானில்
    எத்தனை இருந்திடினும் தம்பி,
வெண்ணிலவு ஒன்றுபோலத் தம்பி - அவை
    வீசிஒளி தந்திடுமோ தம்பி?

பெரியோர் ஒருவரைப்போல் தம்பி - பல
    பேதையர்கள் கூடிடினும் ஆமோ?
சரியாய் உணர்ந்திடுவாய், தம்பி - இதே
    தாழ்வு, உயர்வுணர்வாய், தம்பி.