பக்கம் எண் :

118மலரும் உள்ளம்

ஆரம்பப் பள்ளியும்,
கல்லூரியும்

கல்லூரி :

உயிரெ ழுத்தும் மெய்யெ ழுத்தும்
    ஒன்று ஒன்றாய்க் கூறியே
உயிரெ டுக்கும் பள்ளி யேஇவ்
    வுலகில் நீதான் உயர்வோசொல்?

ஆரம்பப் பள்ளி :

பெரியோர், சிறியோர் என்ற பேதப்
    பேச்சு ஏனோ? நண்பரே.
பெரிய கட்டி டத்தி னாலே
    பெருமை வந்து சேருமோ?

கல்லூரி :

பட்டம் பலவும் பெற்றுச் சர்க்கார்
    பதவி ஏற்று வாழவே
திட்ட மான கல்வி தன்னைத்
    திறமை யோடு தந்ததார்?