ஆ.பள்ளி :
கையி லுள்ள பணமும் போகக்
கடனும் வாங்கி உன்னிடம்
பையன் பட்டம் பெறவே கொட்டிப்
பலன் பெறாதோர் எத்தனை ?
கல்லூரி :
நாக ரிகம் என்ன தென்று
நன்கு காட்டி மாந்தர்கள்
வேக மாக மொழியைக் கற்க
வேண்டும் சக்தி தந்ததார்?
ஆ.பள்ளி :
கழுத்தில் "டை"யும், தலையில் "ஹேட்"டும்,
காலில் "பூட்"ஸு ம் அணிவோரும்
எழுத்துக் கூட்டிக் கற்றி டாமல்
எப்ப டிமுன் னேறினர்?
கல்லூரி :
என்னி டத்தில் பட்டம் பெற்றார்
எத்த னைபேர் தெரியுமோ?
எண்ணில் லாத பேர்க ளென்று
ஏனோ அறிய வில்லைநீ?
|