ஆ.பள்ளி :
நூற்றில் ஒன்றி ரண்டு பேரே
நுழைந்தார், உன்றன் வீட்டிலே.
வீட்டி லுள்ள பால ரெல்லாம்
விரும்பி வந்த தாரிடம்?
கல்லூரி :
சின்னஞ் சிறிய பள்ளி யேநீ
சிறிதும் பணிவு இன்றியே
என்ன, எதிர்த்துப் பேசுகின்றாய்?
எண்ணிப் பேசு என்னிடம்.
ஆ.பள்ளி :
ஏணி யாக என்னை வைத்தே
ஏறி வந்தார், உன்னிடம்.
வீணில் ஏனோ சண்டை? நான்தான்
வித்து என்ப துணருவாய்!
|