பக்கம் எண் :

120மலரும் உள்ளம்

ஆ.பள்ளி :

நூற்றில் ஒன்றி ரண்டு பேரே
    நுழைந்தார், உன்றன் வீட்டிலே.
வீட்டி லுள்ள பால ரெல்லாம்
    விரும்பி வந்த தாரிடம்?

கல்லூரி :

சின்னஞ் சிறிய பள்ளி யேநீ
    சிறிதும் பணிவு இன்றியே
என்ன, எதிர்த்துப் பேசுகின்றாய்?
    எண்ணிப் பேசு என்னிடம்.

ஆ.பள்ளி :

ஏணி யாக என்னை வைத்தே
    ஏறி வந்தார், உன்னிடம்.
வீணில் ஏனோ சண்டை? நான்தான்
    வித்து என்ப துணருவாய்!