பக்கம் எண் :

124மலரும் உள்ளம்

குண்டு

குண்டு ! குண்டு ! உயிர்களைக்
    கொண்டு, கொண்டு போகுதே !
சண்டை போடத் தானடா
    கண்டார் இந்தக் குண்டுகள்.

வானம் மீது கப்பலில்
    வந்து குண்டு போடுவார்.
ஈன மான புத்தியோ?
    இரக்க மென்ப தில்லையோ ?

குழந்தை, குட்டி யாவரும்
    குலைந டுங்க ஓடியே,
விழுந்து கெட்டு உயிர்களை
    விடவோ இந்தக் குண்டுகள்?

கையும் காலும் போகவே
    கஷ்ட முற்றோர் எத்தனை?
ஐயோ, பாவம் ! யாரிடம்
    அவர்கள் அண்டி வாழ்வதோ?