ஊர்கள் பாழாய்ப் போகவே,
உயிர்கள் யாவும் அழியவே,
மார்பு தட்டிப் பேசுவோர்
மனித ரல்லர்; பேயடா!
ஒன்றும் அறியா மனிதரின்
உடல்கள் சாம்பல் ஆவதைக்
கண்டு மகிழும் நெஞ்சமும்
கடின மான கல்லடா.
குண்டு தன்னை யூகமாய்க்
கண்டு தந்த மனிதரின்
மண்டை மூளை உலகையே
மாய்க்கத் தானோ
கண்டது!
|