பக்கம் எண் :

மலரும் உள்ளம்125

ஊர்கள் பாழாய்ப் போகவே,
    உயிர்கள் யாவும் அழியவே,
மார்பு தட்டிப் பேசுவோர்
    மனித ரல்லர்; பேயடா!

ஒன்றும் அறியா மனிதரின்
    உடல்கள் சாம்பல் ஆவதைக்
கண்டு மகிழும் நெஞ்சமும்
    கடின மான கல்லடா.

குண்டு தன்னை யூகமாய்க்
    கண்டு தந்த மனிதரின்
மண்டை மூளை உலகையே
    மாய்க்கத் தானோ கண்டது!