காசினியில் கொல்லாமை
கருணைமிக்க செய்கையென்ற
ஆசியத்துச் சோதி
அருமைப் புத்தர் நீதானோ?
சத்தியத்தைக் காப்பாற்றும்
தருமவான் காந்தியேபோல்
உத்தமனே நீயுதித்தாய்.
உலகில் உயர்வடைவாய்.
யான்பெற்ற நற்குமரா,
இனிமை மழலையினால்
தேனான செந்தமிழில்
தினைமாவும் சேர்த்தனையோ?
அப்பா பெயரோங்க
அம்மா உளங்குளிர
இப்பாரில் நீநடந்து
இன்பமுடன் வாழ்வாயே.
|