பக்கம் எண் :

128மலரும் உள்ளம்

பூனைக் கல்யாணம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்.
பூலோக மெல்லாம் கொண்டாட்டம்.

ஆனை மீது ஊர்வலமாம்.
அற்புத மான சாப்பாடாம்.

ஒட்டைச் சிவிங்கி நாட்டியமாம்.
"உர்,உர்" குரங்கு பின்பாட்டாம்.

தடபுட லான ஏற்பாடாம்.
தாலி கட்டும் வேளையிலே,

மாப்பிள்ளைப் பூனையைக் காணோமாம்!
வந்தவ ரெல்லாம் தேடினராம்.

*
“பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை
பிடிக்கா மல்தான் போய்விட்டார்!

எங்கே ஓடிப் போனாரோ?”
என்றே பலரும் பேசினராம்.